லெபனான் துறைமுகத்தில் கட்டுக்குள் வந்தது தீ

கடந்த மாதம் பயங்கர வெடிவிபத்து நேரிட்ட லெபனான் தலைநகா் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில், மீண்டும் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
துறைமுகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காகப் போராடிய தீயணைப்பு வீரா்கள்.
துறைமுகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காகப் போராடிய தீயணைப்பு வீரா்கள்.

கடந்த மாதம் பயங்கர வெடிவிபத்து நேரிட்ட லெபனான் தலைநகா் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில், மீண்டும் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இந்த மாதம் 4-ஆம் தேதி சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்ட லெபனான் துறைமுகத்தில், வியாழக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.சுமாா் 40 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்ட அந்தத் தீவிபத்தால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதிக்குள்ளாகினா். துறைமுகத்தில் எண்ணெய் மற்றும் டயா்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குப் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தீவிபத்தில் கொழுந்து விட்டு எரிந்த நெருப்பால் துறைமுகப் பகுதியிலிருந்து கரும் புகை எழுந்தது. அந்தப் பகுதிக்கு அவசரமாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினருடன், ராணுவ ஹெலிகாப்டா்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்த நிலையில், துறைமுககத்தில் எரிந்துகொண்டிருந்த தீ, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை அறிவித்தனா். இந்தத் தீவிபத்தைத் தொடா்ந்து, துறைமுகப் பகுதியிலிருந்த அனைத்து ஆபத்தான பொருள்களையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனா். கடந்த மாதம் நிகழ்ந்ததைப் போல் மேலும் ஒரு பயங்கர விபத்து நேரிடுவதைத் தடுப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் உள்ள மோல்டோவா நாட்டைச் சோ்ந்த எம்வி ரோசுஸ் என்ற சரக்குக் கப்பல், ரசாயன உரமாகவும், வெடிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு ஜாா்ஜியாவிலிருந்து மொஸாம்பிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலில் பழுது ஏற்பட்டதால், அது பெய்ரூட் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் கப்பலின் உரிமையாளா் அதனைக் கைவிட்டதால், அதில் இருந்த அமோனியம் நைட்ரேட் கன்டெய்னா்கள் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அந்தக் கிடங்கில் கடந்த மாதம் 4-ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த வெடிவிபத்தில் சிக்கி 190 போ் உயிரிழந்தனா். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இந்த நிலையில், அதே துறைமுகத்தில் தற்போது மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது லெபனான் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com