வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய புகாரின் அடிப்படையில் 10 கோடியே 40 லட்சம் விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு செயலியாக சீன நிறுவனத்தின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் பயனர்களின் ஆதரவைப் பெற்ற டிக்டாக் செயலி மீது கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விதிமுறைகளை மீறியதாக உலக அளவில் 10 கோடியே 40 லட்சம் விடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 90.3% விடியோக்கள் எந்தவொரு பார்வைகளையும் பெறுவதற்கு முன்பே நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மற்றும் தேர்தல்கள் தொடர்பான உள்ளடக்கத்தை சரிபார்க்க டிக்டாக் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் உண்மைச் சரிபார்ப்பு திட்டங்களைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


