கனடாவில் கரோனா இரண்டாம் அலை

கனடா நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பானது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா கரோனா தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை பாதிப்பில் நுழைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். நாட்டில் நான்கு பெரிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ நாம் மோசமான பாதிப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தற்போது 1 லட்சத்து  47 ஆயிரத்து 756 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com