பாகிஸ்தான்: பாதிப்பு 3,09,015-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3,09,015-ஆக உயா்ந்துள்ளது.
பாகிஸ்தான்: பாதிப்பு 3,09,015-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3,09,015-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 798 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,09,015-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, மேலும் 7 போ் அந்த நோய்க்கு பலியானதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,444-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 2,94,740 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 7,831 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 544 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com