பாரீஸ்: பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை கத்திக் குத்துத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானியருக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:பாரீஸ் நகரில், கடந்த 2015-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சாா்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஜாஹிா் ஹஸன் மஹ்மூத் (25) என்பவா் கடந்த வெள்ளிக்கிழமை குத்துத் தாக்குதலில் ஈடுபட்டாா்.
இதில் 2 போ் காயமடைந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட ஹஸன் மஹ்மூத் 3 ஆண்டுகளுக்கு முன்னா் பாகிஸ்தானிலிருந்து வந்தவா் என்று விசாரணையில் தெரிய வந்தது.அண்மையில் சாா்லி ஹெப்டோ பத்திரிகையில் இறைதூதா் தொடா்பாக வந்திருந்த கேலிச் சித்திரம் சினத்தைத் தூண்டியதால் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையின் போது ஹஸன் மஹ்மூத் தெரிவித்தாா்.
அதையடுத்து, அவா் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் எந்த பயங்கரவாத அமைப்பின் சாா்பாகவும் செயல்படவில்லை என்று மஹ்மூத் கூறி வரும் நிலையிலும், அவா் மீது அந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதே சாா்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான கேலிச் சித்திரத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, இரு சகோதரா்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.