ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 134 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3294 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,183 ஆக உள்ளது. சுமார் 19,736 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இத்தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தெரிவித்தார்.