பனாஜி: கோவாவில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாடு சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தெரிவித்துள்ளார்.
பனாஜியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள செயின்ட் எஸ்டேவம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததாகக் கூறினார்.
இதையடுத்து அவருக்கு கொவைட் 19 அறிகுறிகள் இருந்ததாக கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தெற்கு கோவாவில் நியமிக்கப்பட்ட கொவைட்-19 மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட ஆறு பேரில் 5 பேர் வெளிநாட்டில் கப்பலில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.