புதிய ரக கரோனா வைரஸ், மனிதக் குலத்தின் சுகாதாரத்திற்கும் உலகின் அமைதியான வளர்ச்சிக்கும் மிகவும் நெருக்கடியான, மிக கடுமையான அறைகூவல்களை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து நாடுகளும், மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை முதலிடத்தில் வைக்க வேண்டும். சர்வதேசச் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து உதவி செய்து, கரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தோற்கடிக்க வேண்டும் என்று ஏப்ரல் 2ஆம் நாள், உலகில் 100க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த 230க்கும் அதிகமான கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பொது சுகாதாரப் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக ஆக்குவதை தவிர்க்க மாற்றுவதற்கு எதிர்க்க வேண்டும். கரோனா வைரஸ் பரவல் நிலையை சாக்காக பிற நாடுகள் மீது களங்கம் ஏற்படுத்தி, குறிப்பிட்ட நாடுகள், பிரதேசங்கள் மற்றும் இனங்களை பாகுபடுத்தி சொல்லும் செயலும் வேறாக இருக்க கூடாது என்று இக்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்