வூஹானிலிருந்து தொடர்வண்டி மூலம் 55 ஆயிரம் பயணிகள் பயணம் 

வூஹானில் நடைமுடைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து முடக்கம் ஏப்ரல் 8-ம் தேதி முதல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
வூஹானிலிருந்து தொடர்வண்டி மூலம் 55 ஆயிரம் பயணிகள் பயணம் 

வூஹானில் நடைமுடைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து முடக்கம் ஏப்ரல் 8-ம் தேதி முதல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

ஹுபெய் மாநிலத்தின் நல்வாழ்வு குறியீட்டைப் பயன்படுத்தி, பயணிகள் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் வூஹானிலிருந்து வெளியூருக்குச் செல்ல முடியும். அன்று வூஹான் பிரதேசத்தின் வூசாங், வூஹான், ஹான்கோ முதலிய தொடர்வண்டி நிறுத்தங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.

பயணிகள், நல்வாழ்வுக் குறியீட்டைப் பயன்படுத்தி, உடல் தட்ப வெட்பம் மற்றும் தகுநிலை சோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்ட பிறகு தொடர்வண்டியின் மூலம் பயணம் மேற்கொள்ள முடியும்.

ஏப்ரல் 7ஆம் நாள் விற்பனையாகியுள்ள பயணச்சீட்டுகளின் நிலவரப்படி ஏப்ரல் 8ஆம் நாள் 55 ஆயிரம் பயணிகள் தொடர்வண்டியின் மூலம் வூஹானிலிருந்து புறப்படவுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 40 விழுக்காடான பயணிகள் முத்து நதி கழிமுகப் பிரதேசத்துக்குப் பயணிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com