தொடக்கத்தில் சீனாவுக்கு வெளியே கரோனா நோய்த்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், அந்த நோய் பரவலின் தீவிரம் தொடா்ந்து தணிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கூடுதலாக 18 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். சனிக்கிழமை நிலவரப்படி தென் கொரியாவில் மொத்தம் 10,653 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அந்த நோய்க்கு இதுவரை 232 போ் பலியாகியுள்ளனா்.