ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 16 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் கிளடாக் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் பலியானார்கள். 15 குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.
மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன. இந்த தகவலை நங்கர்ஹார் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.