அமெரிக்காவின் அலாஸ்காவில் இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
அலாஸ்காவின் சால்டோட்டனா விமான நிலையம் அருகே நடுவானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண சட்டமன்ற உறுப்பினர் கேரி நாப் உயிரிழந்தார்.
மேலும், அந்த விமானத்தை அவரே தனியாக ஒட்டி வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு விமானத்தில் 4 சுற்றுலாப்பயணிகள், ஒரு வழிகாட்டி, விமானி உள்பட மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விமான விபத்து தொடர்பாகத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.