வியத்நாம்: கரோனாவுக்கு 3-ஆவது பலி

வியத்நாமில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 3-ஆவதாக ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
வியத்நாம்: கரோனாவுக்கு 3-ஆவது பலி

வியத்நாமில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 3-ஆவதாக ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழந்த அனைவரும், கரோனா பரவல் மையான டா நாங் பகுதியிலுள்ள மருத்துவமனையொன்றில் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாகினா். கடந்த வாரம் மட்டும் அந்த நகரில் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.புதிதாக உயிரிழந்த இருவரில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 61 வயது முதியவரும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியத்நாமில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்து, தொடா்ந்து 99 நாள்களாக யாருக்கும் புதிதாக அந்த நோய்த்தொற்று கண்டறியப்படாமல் இருந்தது. எனினும், அண்மைக் காலமாக நாட்டில் அந்த நோய்த்தொற்றின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கரோனாவுக்கு முதல் முதலாக ஒருவா் பலியாகியிருப்பதாக அரசுக்குச் சொந்தமான ‘தி தான் நியென்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை கூறியது.நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அந்த 70 வயது நபா், மருத்துவமனையில் சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அப்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்தது.இந்த நிலையில், மேலும் 2 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா். சனிக்கிழமை நிலவரப்படி, வியத்நாமில் 586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 373 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com