அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 46,321 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 47,11,323 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 532 பேர் உள்பட இதுவரை 1,55,366 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இதுவரை சுமார் 23 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.