அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 49,73,568; பலி 1,61,601 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 49,73,568 -ஆக அதிகரித்துள்ளது. 
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 49,73,568; பலி 1,61,601 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 49,73,568 -ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 55,148  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் புதன்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 49,73,568-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,311 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,61,601 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,271,830 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை சுமார் 2,540,137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com