ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரஷியாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,82,347 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 1,334 பேருக்கு (25.6 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் வெளிப்படவில்லை. மேலும் 129 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 14,854 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 6,90,207 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 1,77,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் உள்ளது ரஷியா.