கனடாவில் மேலும் 220 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாகி வருகிறது.பல்வேறு நாடுகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 220 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 566 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கனடாவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.