சிங்கப்பூரில், மேலும் 102 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 102 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் பெரும்பான்மையானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55,497-ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 50,520 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 4,950 போ் மருத்துவமனைகளிலோ, கரோனா முகாம்களிலோ சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.‘’