வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 84 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 46,286 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,46,634-ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 6,92,780 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 12,691 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,26,131 பேரும், புளோரிடாவில் 6,11,991 பேருக்கும் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர நியூயாா்க்கில் 4,63,195 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.