ரஷியாவில் புதிதாக 4,829 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 110 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 4,829 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,80,405 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 110 பேர் உள்பட இதுவரை 16,914 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போது வரை 7,98,466 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 1,65,025 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.