பாகிஸ்தான்: ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம்

பாகிஸ்தானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ளது பிர்வதாய் பேருந்துநிலையம். இங்கு நிறுவத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமடைந்தனர். 
காயமடைந்தவர்கள் உடனடியாக ஹோலி குடும்ப மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
நிகழ்விடத்துக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com