skorea043256
skorea043256

தென் கொரியா: கிறிஸ்துமஸ் தினத்தில் கரோனா புதிய உச்சம்

தென் கொரியாவில் கிறிஸ்துமஸ் தினமான வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தென் கொரியாவில் கிறிஸ்துமஸ் தினமான வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் வெள்ளிக்கிழமை மட்டும் 1,241 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா தொற்று எண்ணிக்கையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, தென் கொரியாவில் 55,902 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 652 போ் பலியாகியுள்ளனா்.

அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 36,120 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 9,173 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com