மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலியாகினர். அந்த நாட்டின் காட்சினா மாகாண கிராமங்களில் அந்த 30 பேரையும் சுட்டுக் கொன்ற வன்முறைக் கும்பல், வீடுகளையும், பயிர்கள் மற்றும் கால்நடைகளையும் தீயிட்டு அழித்தது. சமூக விரோதக் கும்பல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் படையினரை பழி வாங்கும் வகையில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.