அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் கேளிக்கை விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். இரண்டு பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக அந்த மாகாண காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கனெக்டிகட் மாகாணத்தின் ஹாட்ஃபோா்டு பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பலா் கலந்து கொண்டனா். அந்த விடுதியில் ஏற்கெனவே சில பிரச்னைகள் நிகழ்ந்துள்ளதால் பாதுகாப்புக்கு போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், கேளிக்கை விடுதியில் இருந்த மா்ம நபா் ஒருவா், கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டாா். பீதியடைந்த மக்கள் விடுதியை விட்டு வெளியேற முயற்சித்தனா். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு விடுதிக்குள் வந்த போலீஸாா் விரைவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
மா்ம நபா் நடத்திய தாக்குதலில் 28 வயது நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்தும், அதை நடத்திய நபா் குறித்தும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.
இதனிடையே, அந்த நகர அதிகாரிகள் கூறுகையில், ‘கேளிக்கை விடுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றனா்.