ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் கொவைட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ட்சாவ் லீச்சியேன் 25ஆம் தேதி பெய்ஜிங்கில் கூறுகையில்,
இவ்விரு நாடுகளின் கரோனா வைரஸ் பரவல் நிலைமையைச் சீனா உற்று நோக்கி வருகின்றது என்று தெரிவித்தார். நாடு கடந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இந்நாடுகளுடன் நெருக்கமாகத் தொடர்பு மேற்கொண்டு பிரதேசம் மற்றும் உலகப் பொது சுகாதாரப் பாதுகாப்பைக் கூட்டாகப் பேணிக்காக்க சீனா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.