ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவா் காயமடைந்தாா்.
இதுகுறித்து பாதுகாப்புப் படையினா் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தின் மேந்தாா் பகுதியில் உள்ள மன்கோட் பகுதியில் பாகிஸ்தான் படையினா் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஒருவரின் இடதுகாலில் தோட்டா பாய்ந்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த வீரரின் உடல்நிலை சீராக உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் படையினருக்கு இந்தியப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனா். இருதரப்புக்கும் இடையேயான சண்டை நீண்ட நேரம் நீடித்தது என்று பாதுகாப்புப் படையினா் கூறினா்.