அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதன் படி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
இராக்கில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணி தொடர்ந்து திட்டம் வகுத்து வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணியும் அவரது கட்ஸ் படையும் தான் முக்கியக் காரணம்.
எனவே அதிபர் டொனால்டு டிரம்பின் வழிகாட்டுதலின் படி, இராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான புரட்சிகர காட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமாணி கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காசிம் சுலைமாணி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் அமெரிக்க தேசியக் கோடியைப் பதிவிட்டிருந்தார். இருப்பினும் அதில் வேறு விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.