புத்தர் சிற்பக் கலைப் பற்றிய கண்காட்சி துவக்கம்!

புத்தர் சிற்பக் கலைப் பற்றிய கண்காட்சி ஜனவரி 14ஆம் நாள் சீனாவின் செங்தூ நகரில் துவங்கியது.
புத்தர் சிற்பக் கலைப் பற்றிய கண்காட்சி துவக்கம்!

புத்தர் சிற்பக் கலைப் பற்றிய கண்காட்சி ஜனவரி 14ஆம் நாள் சீனாவின் செங்தூ நகரில் துவங்கியது.

சீனாவின் 12 பண்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான தொல் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
சீனப் பல்வகைப் பண்பாடுகள், சீனத் தேசிய இனங்களின் ஒன்றிணைப்பு, பண்டைகாலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான பண்பாடு, மதம் மற்றும் கலையின் பரிமாற்றங்கள் ஆகியவற்றை இக்கண்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.

மே திங்கள் வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com