சிட்னி: சாலமன் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.
பசிபிக் நாட்டின் தலைநகரான ஹொனியாராவின் தென்கிழக்கிலிருந்து சுமார் 140 கி. மீட்டர் தொலைவிலும், 17.7 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சுனாமி குறித்த எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2013-ல் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.0 ஆகப் பதிவானது. அதில், 10 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.