அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 55,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 27,35,554 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று மொத்த உயிரிழப்பு 1,28,684 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 11.9 லட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இன்று பதிவானது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். நேற்று 52,000 பேர் பாதிக்கப்பட்டிருந்ததே இதுவரை அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்து வந்தது.
அதேபோன்று உலக நாடுகளில் பிரேசிலின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பை அமெரிக்கா விஞ்சியுள்ளது. அதாவது, உலகிலேயே அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு கடந்த ஜூன் 19 ஆம் தேதி பிரேசிலில் (54,771) பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.