இலங்கை: வெலிக்கடை சிறையில் கைதிக்கு கரோனா; 600க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இலங்கையின் வெலிக்கடைச் சிறையில் ஒரு கைதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 600க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இலங்கை: வெலிக்கடை சிறையில் கைதிக்கு கரோனா
இலங்கை: வெலிக்கடை சிறையில் கைதிக்கு கரோனா

இலங்கையின் வெலிக்கடைச் சிறையில் ஒரு கைதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 600க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலருக்கு பிசிஆர் கருவிகள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 210 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார சேவைகள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதியுடன் தொடர்பில் இருந்த கைதிகள் மற்றும் அதிகாரிகள்அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தி, பி.சி.ஆர். கருவிகள் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கரோனா பாதித்த கைதி, கந்தக்காட்டில் உள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மையத்தில் இருந்து வழக்கு விசாரணைக்காக கடந்த மாதம் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டவர்.

இதனால், கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் சிறை அதிகாரிகள் உள்பட 600 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 170 கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com