அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 30,51,427 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 894 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 1,32,256 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 13 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு தினங்களாக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.