தொடர்ந்து உச்சம் தொடும் அமெரிக்கா; ஒரே நாளில் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தைத் தொட்டுவருகிறது. அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 70 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தொடர்ந்து உச்சம் தொடும் அமெரிக்கா
தொடர்ந்து உச்சம் தொடும் அமெரிக்கா

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தைத் தொட்டுவருகிறது. அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 70 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்கா முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் சுமாா் 70,000 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். நேற்று 60,500 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பதிவானது. முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை சுமாா் 60,000 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது.

புதிய கரோனா நோயாளிகளையும் சோ்த்து, அமெரிக்காவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,91,786-ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் கரோனா பாதித்தவர்களில் 1,36,671 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அந்த நாடு பல வாரங்களாக தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. 

அமெரிக்காவில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 14,60,495 போ் குணமடைந்துவிட்டதாகவும் 16,94,117 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com