ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா தொற்று நிலவரம் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,46,369 ஆக உயர்ந்துள்ளது. அங்கு புதிதாக பாதிப்புக்குள்ளானோரில், 1,708 பேருக்கு (26.6 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லை.
அதிகபட்சமாக மாஸ்கோவில் 628 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 156 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11,770 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 10,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,23,249 பேர் குணமடைந்துள்ளனர்.