அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கில் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கரோனாவால் பாதித்தோர் விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 67,632 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 34,95,536 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,37,358 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.