சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்தி, எதிர்காலத்தைக் கருத்துக் கொள்ள வேண்டும். இது தான் சரியான தெரிவாகும் என்று சீன ஊடகக் குழுமச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அமெரிக்காவுக்கான சீனத்தூதர் சுய் தியான்காய் தெரிவித்தார்.
சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, தற்போது, இரு நாட்டு உறவு மிக பெரிய அறைகூவலை எதிர்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் ஓர் காரணியாகும். இதனைத் தவிர, உலக மேலாண்மை பல புதிய அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளது.
அமெரிக்காவும் இதே பிரச்சினையில் சிக்கியுள்ளது. அந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத் துறையில் முரண்பாடுகள் அதிகமாகி வருகின்றன. இது மற்றொரு காரணியாகும் என்று அவர் கூறினார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்