அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60,000 பேர் என்ற அளவில் பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 68,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 38,91,893 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 961 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 1,41,883 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 17 லட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் தொடர்ந்து 8-ஆவது நாளாக ஒருநாள் பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.