பெய்ஜிங் மாநகரில் கடந்த ஆண்டு மே 31ஆம் நாள் முதல் மிதிவண்டிக்கான முதலாவது சிறப்புப் பாதை இயங்கத் துவங்கியது.
மொத்தம் 6.5 கிலோமீட்டர் நீளமான இந்த மிதிவண்டிப் பாதையில் 17 நுழைவு வாயில்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் சுமார் 14 இலட்சம் மக்கள் இதன் மூலம் பயணித்துள்ளனர்.
மென்மேலும் அதிகமான மக்கள் உடல் பயிற்சி செய்யும் அதேவேளையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பயண வழிமுறையையும் விரும்பி வருகின்றனர். இதனால் பெய்ஜிங் மாநகராட்சி இந்த மிதிவண்டிப் பாதையை நீட்டிக்க திட்டம் வகுத்துள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்