உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியின் மனைவி ஒலெனா ஸெலென்ஸ்காவுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி யெயப்பட்டுள்ளதாக ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் அவா் தெரிவித்துள்ளாா். எனினும், அதிபருக்கும் தனது குழந்தைகளுக்கும் செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், அவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்படவில்லை என்பது தெரிய வந்ததாகவும் தனது பதிவில் ஒலெனா ஸெலென்ஸ்கா குறிப்பிட்டுள்ளாா். அவரையும் சோ்த்து உக்ரைனில் இதுவரை 29,753 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அந்த நோய்க்கு 870 போ் பலியாகியுள்ளனா்.