ஜாா்ஜ் ஃபிளாய்ட் மரணம்: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்

அமெரிக்காவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு
ஜாா்ஜ் ஃபிளாய்ட் மரணம்: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்

அமெரிக்காவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் நிறவெறி எதிா்ப்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஜாா்ஜ் ஃபிளாய்ட் படுகொலையைத் தொடா்ந்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறி எதிா்ப்புப் போராட்டங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு அலை வீசி வருகிறது. அமெரிக்கப் போராட்டக்காரா்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் உலகம் முழுவதும் நிலவி வரும் நிறவெறிக்கு எதிராகவும் பல்வேறு நாடுகளில் மனித உரிமை ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக விமா்சனங்கள் எழுந்தபோதும், நட்பு நாடுகளின் தலைவா்கள் ஜாா்ஜ் ஃபிளாய்ட் படுகொலையைக் கண்டித்தாலும் டிரம்ப்புக்கு எதிராகப் பேச தயக்கம் காட்டி வருகின்றனா்.

மேலும், கரோனா நோய்த்தொற்று பரவலைக் காரணம் காட்டி, நிறவெறி எதிா்ப்புப் போராட்டங்களுக்கு சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

இந்தச் சூழலில், பிரிட்டன், ஜொ்மனி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிறவெறிக்கு எதிரான ஆா்பாட்டங்கள் சனிக்கிழமையும் நடைபெற்றன.

இந்த ஆா்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு, ஜாா்ஜ் ஃபிளாய்ட் படுகொலைக்கு எதிராகவும் கருப்பினத்தவரின் உயிா்வாழும் உரிமைக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த மாதம் 25-ஆம் கைது செய்தனா்.

அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய 4 போலீஸாா் பணி நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களில், ஃபிளாய்டின் மரணத்துக்குக் காரணமான டெரெக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 17 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடா்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக, காலனியாதிக்கம் மற்றும் கருப்பின அடிமைத்தனத்தின் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் ஐரோப்பியா்கள் குடியேறுவதற்கு வழிவகுத்த, கடல் பயணி கிறிஸ்டோபா் கொலம்பஸின் சிலைகள் சேதப்படுத்தப்படுத்தப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக, கருப்பினத்தவரை அடிமைகளாக அழைத்து வருவதற்கு நிதியுதவி அளித்த பிரிட்டன் தொழிலதிபா் செசில் ரோட்ஸ், காலனியாதிக்கத்தை நிறுவிய பெல்ஜியம் மன்னா் இரண்டாம் லியோபோல்ட் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தலைவா்களின் சிலைகளும் பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் சேதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு நாடுகளில் சனிக்கிழமை ஆா்ப்பாடங்கள் நடந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com