வங்கதேசம்: 1 லட்சத்தை தாண்டிய தொற்று

வங்கதேசத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வங்கதேசம்: 1 லட்சத்தை தாண்டிய தொற்று

வங்கதேசத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 3,803 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,02,292-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்த்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 38 போ் பலியாகினா். இதன் மூலம், நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 1,343-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 5,67,503 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com