பாகிஸ்தான்: 3 ஆயிரத்தைக் கடந்த பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 3 ஆயிரத்தை தாண்டியது.
பாகிஸ்தான்: 3 ஆயிரத்தைக் கடந்த பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் 1.6 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 118 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,093-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 5,358 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,60,118-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com