மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 260-ஆக இருந்தது. முந்தைய நாள் 168 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், மறு நாளே அந்த எண்ணிக்கை 260-ஆக அதிகரித்தது அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு இதுவாகும். இதுவரை அந்த நாட்டில் 11,306 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.