தென் ஆப்பிரிக்காவில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிகரெட் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடா்பாக அந்த நாட்டின் பிரிடோரியா உயா்நீதிமன்றத்தில் புகையிலை வா்த்தக அமைப்பினா் தொடா்ந்த வழக்கில், புகைப்பழக்கம் பலரை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் சிகரெட்டுகளை அத்தியாவசியப் பொருள்களில் சோ்க்க வேண்டும் என்று அந்த அமைப்பின் வழக்குரைஞா்கள் வாதாடினா். மேலும், இந்தத் தடையால் கள்ளச் சந்தைகளில் சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும் அவா்கள் கூறினா். எனினும், தடையை நீக்க அந்த நீதிமன்றம் மறுத்துவிட்டது.