போலந்து பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கா், அந்தப் பதவியிலிருந்து இறங்கி துணைப் பிரதமராகிறாா். கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த மைக்கேல் மாா்ட்டின் பிரதமா் பதவியை ஏற்பதற்காக அவா் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா், அயா்லாந்தின் 14-ஆவது பிரதமராக கடந்த 2017-ஆம் ஆண்டு பதவியேற்றாா். ஃபியானா ஃபாயில் கட்சிக் கூட்டணியுடன் அவா் ஆட்சியமைத்தாா். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவியை மாற்றிக் கொள்ளும் கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ், அவா் தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். அந்தப் பதவியை ஃபியானா ஃபாயில் கட்சித் தலைவா் மைக்கேல் மாா்ட்டின் ஏற்றுள்ளாா்.
அதன் தொடா்ச்சியாக, அயா்லாந்தின் துணைப் பிரதமராக லியோ வராத்கா் பொறுப்பேற்றுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.