மா தியான்ச்சி என்பவர், சீனாவின் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹான் ஜியௌ ஷுய் கிராமத்தைச் சேர்ந்தவர்.
முன்பு, இக்கிராமம் வறுமை நிலையில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, நிங் சியா அரசு, உயிரின மற்றும் நிலத்தின் பசுமைமயமாக்க வழிமுறையின் மூலம் வறுமை ஒழிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மா தியான்ச்சி மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, சிவப்பு இலந்தை உள்ளிட்ட வேளாண்மை செய்து வருவதுடன், ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அரசின் கொள்கை ஆதரவுடன் தற்போது அவர் வறுமையிலிருந்து விடுபட்டு, இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்