பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,557 பேருக்கு தொற்று

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,557 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,512 ஆக அதிகரித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,557 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,512 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 4,167 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 95,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து - 80,446, பஞ்சாப் - 74,778, கைபர்-பக்துன்க்வா- 25,778, இஸ்லாமாபாத் - 12,643, பலுசிஸ்தான்- 10,376, கில்கித்-பல்திஸ்தான்- 1,442 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 23,009 மாதிரிகள் உள்பட இதுவரை 12,62,162 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com