டிரம்ப்பை கைது செய்ய ஈரான் ஆணை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்வதற்கான ஆணையை ஈரான் அரசு திங்கள்கிழமை பிறப்பித்தது. அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலின் உதவியையும் அந்நாட்டு அரசு நாடியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்


டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்வதற்கான ஆணையை ஈரான் அரசு திங்கள்கிழமை பிறப்பித்தது. அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலின் உதவியையும் அந்நாட்டு அரசு நாடியுள்ளது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ஆண்டு அறிவித்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதையடுத்து, யுரேனியம் செறிவூட்டலை ஈரான் படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில், ஈரானின் முக்கிய படைப் பிரிவுத் தலைவர் காசிம் சுலைமானியை கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரான் அரசு வழக்குப் பதிவு செய்தது. அதில் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்வதற்கான ஆணையையும் ஈரான் அரசு பிறப்பித்துள்ளது. அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராக "ரெட் நோட்டீஸ்' பிறப்பிக்குமாறு இன்டர்போல் அமைப்புக்கும் அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இந்தக் கோரிக்கையை இன்டர்போல் அமைப்பு ஏற்காது என்றே தெரிகிறது. ஈரான் அரசின் கைது ஆணை அதிபர் டிரம்ப்பை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றபோதிலும், இரு நாடுகளுக்குமிடையேயான மோதல் போக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதாரத் தடைகளாலும் கரோனா நோய்த்தொற்று பிரச்னையாலும் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com