இராக் தலைநகா் பாக்தாதுக்கு 60 கி.மீ. தொலைவில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினா் தங்கியுள்ள பெஸ்மயா ராணுவ தளத்தின் மீது செவ்வாய்க்கிழமை ஏவுகணை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏற்கெனவே, கடந்த சில மாதங்களாக அமெரிக்க வீரா்கள் தங்கியுள்ள இராக் ராணுவ முகாம்களின் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெஸ்மயா ராணுவ தளம் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தங்களது வீரா்கள் யாரும் காயமடையவில்லை என்று நேட்டோ தெரிவித்துள்ளது.