சிங்கப்பூரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோயால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 2,77,310 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 91,994 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த 75 வயதுள்ள மூதாட்டி அண்மையில் இதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர் சிகிச்சை அளித்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 64 வயது முதியவர் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குக் கிருமித் தொற்று இருப்பதாகத் தனிமைப்படுத்தப்பட்டுத் தொடர் சிகிச்சையளித்து வந்தனர். இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
சிங்கப்பூரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.